தமிழ்த் தேசியவாதி

Friday, July 14, 2006

விடுதலையின் படிக்கல்லில்...

கருவறையில் மங்கலென்று
கலங்குகிறது நெஞ்சு
கண்ணீர் சொரிந்து விம்முகிறது பிஞ்சு மழலை.
புரிந்து உணர்ந்துகாலம் கடந்தாயிற்று.
ஞானம் தான் இன்னும் பிறக்கவில்லை.

வியவருடப் பொழுதும் விடிந்தாயிற்று.
வெந்து நொந்தவர் வேலெடுத்தோம்வினையறுக்க.
வேள்வித் தீயின் அர்ப்பணிப்புகளுக்கு
சமர்ப்பணம் செய்யவேண்டியவனே
அமைதியாய் அமர்ந்திருப்பதன்
அர்த்தம் என்ன?

மரணம் வரும்வரையில் காத்திருத்தல்
மறவர் பரம்பரைக்கு அழகல்ல.
உன்னை அழிப்பதற்காய்
காலனவன் பார்த்திருக்கிறான்.
தமிழரை காப்பதற்காகவே
கரிகாலனவன் அவதாரமெடுத்திருக்கிறான்.

களம்நோக்கி விரைந்தாலே
மனம்நோகாமல் வாழலாம்.
இனக்கலவரத்தின் வேர்கள்மீண்டும் துளிர்க்கிறது.
எம் தலைநகரிலேயே
தாண்டவம் ஆடியாயிற்று.
நாளை உன் வீட்டிலும்
இது விழுது பரப்பும்.

பன்னெடுங்காலமாய்
பாதகர் புரிந்த
இன்னல்கள் எல்லாம் மறந்தாயோ?
விண்ணகம் சென்ற எம் வேந்தர்
கனவு துறந்தாயோ?
என்னடா? ஏனடா?
இன்னும் ஏன் தயக்கம்?
உலகம் எமக்காய் உருகும் என்பது வேசம்.
சமாதானப் பேச்சென்பது
எம்மை சாகடிப்பதற்கானவிசம்.
அது நீலமாக நீண்ட நேரமெடுக்கலாம்.
ஆனால் மரணம் நிச்சயம்.
வீரர்க்கு சாவு ஒருதடவையே.
விரைந்திடு
விடுதலையின் படிக்கல்லில்
நீயும் ஒருவனாய்.

இரத்தின "மை"

0 Comments:

Post a Comment

<< Home