சுதந்திரமே சுவாசம்….
Records from 2006 files
கரையேற வழியின்றி தவிக்கின்ற
வாகரை மக்களின் கண்ணீர்
தென்னிலங்கை வானில் மழையாக…
நேற்றுவரை நாமிருந்த வீடு-அதில்
நிமிர்ந்து நடந்த சுவடுகள்,
கூடவே வாழ்ந்த உறவுகள்…
இன்று திசைக்கொன்றாய்பசித்த வயிற்றுடன்.
வனந்தரமே வாழ்கiகையாகி
மரக்கிளையே கூரையாகி
விழுதுகளே ஏணைகளாகி
வேர்களே தாய்மடியாகி
மழைநீரே தாய்முலையாகி
தாண்டவம் ஆடுதுதமிழன் அவலம்.
மீண்டும் துளிர்க்கும்வசந்த்ததை எதிர்பார்த்து.
எறிகணையானலும் எதிர்த்து நிற்போம்.
சாவையும் சந்திக்க தயாராகுவோம் - ஆனால்
சரணகதியடையோம் சபதம் கொள்வோம்.
நெருப்பாற்றையே கடக்க துணிந்த எங்களுக்கு
மாவிலாறொன்றும் மரணப்பொறியல்ல மனங்கொள்வோம்.
முகமாலையில் மூக்குடைபட்ட
துட்டகைமுனுவின் புத்திரர்களே!
மீண்டும் ஏன்தலையை
மலையில் மோதமுயற்சிக்கிறீர்கள்?
சுட்டெரிக்கம் சூரியனின்சாட்சியாக சொல்கிறோம்
எம்மை தொட்டவர் கரம்வெட்டியெறிவோம்.
முட்டிய பகையுடன் மோதிக்கதைமுடிப்போம்.
“சுதந்திரமே சுவாசம் எனக்கொள்வோம்
விடுதலையை விரைவாய் அடைவோம்.”
இரத்தின “மை”
0 Comments:
Post a Comment
<< Home