தமிழ்த் தேசியவாதி

Friday, October 31, 2008

வரலாற்றை மாற்றிய வரலாறு…

Records from 26-10-2007 files

உலகிலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக விடுதலைப் புலிகளே உள்ளனர், அவர்களை போரின் மூலம் வெல்ல முடியாது என்று, இன மோதல்கள் தொடர்பான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெரார்ட் சாலியண்ட கருத்து தெரிவித்திருந்தார். ஜெரார்ட் சாலியண்ட “கள யதார்த்தம் தெரியாமல் பேசியுள்ளார்” என்று அதற்குப் பதிலடியாக பேசினார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய.

இருவடைய கருத்துக்களும் வெளிவந்து மூன்று நாட்களுக்குள் அனுராதபுர வானூர்தி தளத்தின் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான இருவழி அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தி முடித்துவிட்டு , அடுத்த பெரும் தாக்குதலுக்கான இறுதிக் கட்ட திட்டமிடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனடிப்படையில் பார்க்கும் போது, சிறீலங்காவினுடைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவா அல்லது ஜெரார்ட் சாலியண்டா களயதார்தம் தெரியாமல் பேசியுள்ளனர் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிட்டு, அனுராத வானூர்தித் தளத்தின் மீதான எல்லாளன் நடவடிக்கைiயும், அதன் போரியல் பரிமாண போக்கையும், விடுதலைப் புலிகளின் “மௌன காப்பு” மற்றும் தாக்குதல் உணர்த்தும் சேதி போன்றவற்றையும் கீழே நோக்குவோம்.

இலங்கைத் தீவில் சிறீலங்காப் படைகளுக்கு சொந்தமாக ஐந்து பிரதான வானூர்தி தளங்கள் இரத்மலானை, பலாலி, சீனன்குடா, கட்டுநாயக்கா, அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன. இவற்றில் இரத்மலானை, கட்டுநாயக்கா ஆகிய வானூர்தித் தளங்கள் மேல் மாகாணத்திலமைந்துள்ளன. ஏனையவை வட-கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திலமைந்துள்ளன. இந்த வானூர்தித் தளங்கள் பரந்து இருப்பினும், மேற்கூறிய வானூர்தித் தளங்கள் ஐங்திலும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் அனைத்து தாக்குதல்களும் ஊடுருவி தாக்குதல்களாவே அமைந்துள்ளன. அந்த தாக்குதல்களை ஆராய்கின்ற போது, காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் தாக்குதல் திட்டங்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்வதையும், ஒவ்வொரு தாக்குதலின் பின்னரும் விடுதலைப் புலிகளின் படிநிலை வளர்ச்சியடைவதையும் காணமுடிகிறது.

வானுர்தி தளம் மீதான முதலாவது தாக்குதல் 1980களின் நடுப்பகுதியில் இரத்மலானை வானூர்தித் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்;டிருந்த அவ்ரோ வானுர்தியை குண்டுவைத்து தகர்த்ததுடன் ஆரம்பமானது. லெப் கேணல்: ராதவே அந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாயகம் திரும்பியிருந்தார். அதன் காரணமாகவே விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு பிரிவுக்கு ராதா வானூர்தி எதிர்ப்பு படையணி என்ற பெயர் சூட்டப்பட்டது.

இரண்டாவது தாக்குதல் 1990களின் ஆரம்பத்தில் பலாலி கூட்டுப்படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது.; முற்று முழுதான வெற்றியை குறித்த தாக்குதல் அளிக்கவில்லையாயினும் பின்னர் இடம்பெற்ற வெற்றிகராமான தாக்குதல்களுக்கான சிறந்த அனுபவத்தை வழங்கியிருந்தது. 1991ல் இடம்பெற்ற ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல் வெளிச்(ஆ.க.வெ)சமரில் ஏற்பட்ட பின்னடைவினூடாகப் பெறப்பட்ட அனுபவம் விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு எப்படி வழிகோலியதோ, அது போன்ற ஒரு தாக்குதலாகவே பலாலி படைத்தளம் மீதான தாக்குதலும் அமைந்திருந்ததெனலாம். இந்த தாக்குலில் கெனடி தலைமையிலான சுமார் 15 கரும்புலிகள் பங்குபற்றியதாக நம்பப்படுகிறது.

ஒரு தாக்குதலின் வெற்றியிலிருந்து பெறப்படும்; அனுபவத்திலும் பார்க்க தோல்வியிலிருந்து கிடைக்கும் அனுபவங்கள் கனதியானவையும் பயன்மிக்கவையும் ஆகும். அதனை சரிவர பயன்படுத்துவதனூடாக தமது தரப்பின் எதிர்கால தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னெடுக்கமுடியும் என்பது சாத்தியமானது. இதனை விடுதலைப் புலிகள் நிரூபித்து காட்டியுள்ளார்கள்.

மூன்றாவது தாக்குதல் திருகோணமலையிலமைந்துள்ள சீனன்குடா விமானப் படைத்தளம் மீது 1997 மார்ச் 5ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அந்த வெற்றிகரமான தாக்குதலின் மூலம் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் சில வானூர்திகள் பாரிய சேதத்திற்குள்ளாகினா. ஆந்த தாக்குதலினூடாக சிறிலங்கா விமானப்படைக்கு சுமார் 125 மில்லியன் ந~;டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தது. அந்த தாக்குதலின் போதும் விமானப்படைக்கு ஏற்பட்ட இழப்பு கணிப்பிடப்பட்டவற்றிலும் பார்க்க அதிகமானது என அன்றைய எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி தெரிவித்திருந்தது. குறித்த தாக்குலின் போது விடுதலைப் புலிகள் வித்தியாசமான உத்தியை கையாண்டார்கள். அதாவது தமது அணிகள் வானுர்தி தளத்துக்குள் ஊடுருவ முன்னர் வானுர்தி தளம் மீது மோட்டார் குண்டு மழை பொழிந்தார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து படையினர் மீள்வதற்கிடையில், சுமார் 15பேர் கொண்ட கரும்புலி அணி தனது பாய்ச்சலை காட்டியது. இதில் மேஜர் சிற்றம்பலம், கப்டன் நிவிதன், கப்டன் விஜயரூபன் ஆகிய போராளிகள் வீரச்சாவை அணைத்தார்கள் என அன்றைய காலப்பகுதியில் சண்டேரைம்ஸ் செய்தி வெளியிட்ருந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க தாக்குதல்களில் ஒன்றான நான்காவது தாக்குதல் கட்டுநாயக்கா வானூர்தி தளம் மீது மேற்கொள்ளப்பட்டது. 2001 ய+லை 24ம் திகதி அதிகாலை 3.50 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சுமார் இரு மணிநேரம் தீவிரமாக இடம்பெற்றது. இதனூடாக சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட இழப்பு சிறீலங்கா விமானப்படைக்கு ஏற்பட்டது. சிறீலங்கா அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டு வரவும், உலகம் தமிழர்களின் போரியல் பலத்தை அறியவும் இந்த தாக்குதல் வழியமைத்தது. உலகத்தின் கண்களை திகைப்பில் ஆழ்த்தி, அன்றைய ஆட்சியாளர்களை நிலைகுலைய வைத்து, முப்படையையும் அதிர்ச்சியில் உறைய வைத்து, பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்த அந்த தாக்குதலை 700 ஏக்கர் நிலப்பரப்புக்குள் நின்றபடி சுமார் 15 போராளிகள் மேற்கொண்டிருந்தனர். இந்த கீர்த்தி மிகு தாக்குலில் வீரச்சாவை அணைத்துக் கொண்ட ஒரு மாவீரனின் தாய், குறித்த தாக்குதலுக்கான வேவு அணியில் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“றிவிரச”, “சத்ஜெய”, “எடிபல” இராணுவ நடவடிக்ககைகளுக்கு பிற்பாடு,
விடுதலைப் புலிகளின் கதை இன்னும் 4 மாதத்துக்குள் முடிவுக்கு வரப்போகிறது என கேணல் ரத்வத்தை காலவரையறை செய்ய, ஓயாத அலைகளாய் எழுந்த புலிகள் இறுதியில் சீனன்குடா வானூர்தி தளத்தில் அதிரடியை நிகழ்த்தினார்கள்.

வன்னிக்குள் புலிகளை துண்டாடி ஏ- 9 பாதையை படையினரின் போக்குவரத்திற்காக திறக்க முனைந்த “ஜயசிக்குறுவின்” முதுகெலும்பை முறித்து கட்டுநாயக்காவின் நெஞ்சில் ஏறி மிதித்து மக்களின் போக்குவரத்திற்காய் பாதையை திறந்து விட்டனர் புலிகள்.

கிழக்கினை சிங்கள மயப்படுத்தும் நோக்குடன், அதனை ஆக்கிரமித்த பின் “ புலிகளை கிழக்கிலிருந்து முற்றாக விரட்டியடித்து, கிழக்கினை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து விட்டதாக” சிங்களம் கொக்கரித்த போது விடுலைப் புலிகளின் சிறப்பு கரும்புலிகள் அதன் கழுத்தை நெரித்து கொட்டத்தை அடக்கியுள்ளனர்.

ஈகமும் வீரமும் தீவிரமமும் நிறைந்த இந்த தாக்குதல் 2007 ஒக்டோபர் 22ம் திகதி அதிகாலை 3.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இதில் 21 சிறப்பு கரும்புலிகள் வீரச்சாவை அணைத்துள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சியன் கணக்குப் படி 18ற்கு மேற்பட்ட வானுர்திகள் அழிக்கப்பட்டுள்ளது. சுமார் 660 கோடி ரூபா ந~;டம் விமானப் படைக்கு ஏற்பட்டுள்ளது.

இறுதியாக கிடைத்;த தகவலின்படி 21 வானூர்திகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் எதனையுமே விடுலைப் புலிகளின் சிறப்பு கரும்புலிகள் விட்டு வைக்கவில்லை. அங்கிருந்த அனைத்து விமானங்களும் அழிக்கப்பட்ட பின்பு மறைவில் நிறுத்தப்பட்டிருந்த யுஏவி உளவு விமானத்தை தேடிக்கண்டு பிடித்து அழிக்கும் நிலையில் புலிகளின் மேலாண்மை அந்த தாக்குதலில் நிலவியது. இதனை ஆழமாக அலசும் போது இந்த தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை ஆரம்பத்திலிருந்து தாக்குதல் மேற்கொள்வதற்கான இறுதி நிமிடம் வரை துல்லியமாக சேகரிக்கப்பட்டு;ளது. அதனூடவே அதிகளாவான வானூர்திகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நாளும் கணக்கிலெடுக்கப்பட்டுள்ளது.
பலாலி கூட்டுப்படைத் தளம் மீதான தாக்குதலினூடாக முகாமாலையிலிருந்து வன்னியை நோக்கி மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டதோ, அதேபோல் மன்னார் மாவட்டத்திலிருந்து வன்னியை நோக்கி மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் எல்லாளன் நடவடிக்கை மூலம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

போரியல் உபாயத்தின் படி இருவகையான தாக்குதல்களை மேற்கொள்;வதே ஒப்பீட்டளவில் சாதகமானது. ஓன்றில் எதிரி எம்மை நோக்கி முன்Nனுறும் முன் அவனது கோட்டைக்குள் புகுந்து அவனது கட்டமைப்புகளை சிதறடித்து தாக்குதலுக்கு தயார்படுத்திய திட்டங்களை சிதைத்தல். இரண்டாவது எதிரியை எமது நிலப்பரப்புக்குள் அகல கால் பதிக்க வைத்துவிட்டு தருணம் பார்த்து சுற்றிவளைத்து அல்லது ஊடறுத்து அதிரடி தாக்குதலை திடீரென மேற்கொண்டு அவனை நிலைகுலைய வைத்தல். அனுராதபுர வான்படைத் தளம் மீதான தாக்குதலை முதலாவதிற்கான அண்மைக்கால உதாரணமாகக் குறிப்பிடலாம். இரண்டாவதிற்கான சிறந்த உதாரணமாக “ஜெயசிக்குறு” படையினர் மீதான ஓயாத அலை-3 ஆக்ரோசத்தை குறிப்பிடலாம். எமது தரப்பு மேலாண்மையை நிலைநிறுத்துவதற்கு தற்காப்பு சமரைவிட தாக்குதல் சமர் புரிவதே சிறந்த மார்க்கம் என போரியல் மரபுகளுடாக அறியமுடிகிறது. ஆயினும் தற்காப்பு சமரில் ஆரம்பித்து அதனையே தாக்குதல் சமராக மாற்றக்கூடிய வல்லமை இருக்குமாயின் களமுனையில் கையோங்கியவர்களாக நாமே இருப்போம். அத்துடன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு எதிரிக்கு நீண்டகால அவகாசம் தேவைப்படும். கூடவே எதிரியின் மனோபலம் இலகுவில் கட்டியெழுப்பப்படாதபடி சிதைக்கப்பட்டு விடும். பிரகடனப்படுத்தப்படாத ஈழப்போர்- 4 ல் 2006, ஒக்டோபர் 14ம் திகதி முகமாலை-பளை களமுனையில் இது தான் நடந்தது. அதாவது தற்காப்பு நிலையிலிருந்த புலிகள் குறுகிய நேரத்துக்குள் தாக்குதல் தரப்பினராக மாறினார்கள். கேணல் ஹரிகரனின் மொழியில் அதன் விளைவை கூறுவதாயின் “தன் தலையை மலையோடு கொண்டு சென்று மோதியது” சிங்கள இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் படைகள்.


கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட “எல்லாளன் நடவடிக்கையினூடாக” வன்னி நோக்கிய படைநகர்வு மட்டும் தாமதிக்கவில்லை. மாறாக சிறீலங்காப் படைகள் தொடர்பான படைவலிமையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் முப்படைகளுக்கும் ஆட்களை சேர்த்துக் கொள்ளமுடியும். வட்டிக்கு கடன் வாங்கி, பொதுமக்களின வாழ்க்கை செலவை உயர்த்தி; அவர்களின் வயிற்றில் அடிப்பதனூடாக நவீனரக ஆயுதத் தளபாடங்களை கொள்வனவு செய்ய முடியும். ஆனால் மனோபலத்தை கட்டியெழுப்புதல் என்பது மிகச் சவாலான விடயம். சிறீலங்காப் படைத்துறை வரலாற்றில் ஆட்பலத்தையும், ஆயுத தளபாடங்களையும் கட்டியெழுப்புவதில் காட்டப்பட்ட அக்கறை மனோபலத்தை கட்டியெழுப்புவதில் காட்டப்படவில்லை. ஆனால், விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மூன்று விடயங்களிலும் உரிய அக்கறை செலுத்துவதில் குறியாய் இருந்து வருகின்றனர் என்பது அவர்களுடைய செயல்பாடுகளை தொடர்ச்சியாகவும், ஆழமாகவும் அவதானிக்கும் போது தெரிகிறது.

தென்னிலங்கையில் கிழக்கு புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களின் மூலம் ஊதிப் பொருப்பிக்கப்பட்ட வெற்றி சிந்திப்பு தன்மையற்ற சிங்கள மக்களை உற்சாகப்படுத்தியதில் பாதியை கூட களமுனையில் நின்ற படையினரிடம் உண்டுபண்ணவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் சாதித்து வந்த மௌனம் தமிழ் மக்களினுடைய மனங்களில் குழப்பத்தை சில சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தியதே தவிர போராளிகளிடம் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், போராளிகளின் மனோபலத்தை பேணுவதில் அதன் தலைமை, தொடர்ச்சியாக அதிக கவனம் செலுத்தி வந்தமையே ஆகும். அதனூடவே எந்த இடத்திலும் நினைத்த வேளையில் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொள்ளும் வல்லமையை பெற்றிருக்கிறார்கள். அத்துடன் ஒழுக்கப்பண்பையும் பேணுவதில் குறிப்பாகவுள்ளனர். ஆனால், இரண்டும்கெட்டான் நிலையிலேயே சிங்களப்படைகள் உள்ளது. இல்லையெனில், சிங்கத்தின் கோட்டைக்குள் புகுந்து துவம்வம் செய்த போது, எந்தவித முறியடிப்பு தாக்குதலுக்கும் திரணியற்றவர்கள், தாக்குலில் வீரமரணமடைந்த மாவீரர்களின் உடலை நிர்வாணமாக்கி மக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்களா? போரியல் மரபுக்கும், உலக நியதிக்கும் எதிரான விடயத்தை சிங்களப் படைகள் மீண்டுமொருமுறை செய்திருக்கின்றன.

இந்தவிடத்தில் குறிப்பிடப் பட வேண்டிய இன்னொரு விடயம் யாதெனில், தமிழ் மக்கள் தேவையற்று இனி மேலும் போலி ஊடாகப் பரப்புரைகளால் மனம் சஞ்சலப்டக்கூடாது. பின்னடைவுகளின் போது தாமும் சோர்வடையாமல் போராளிகளை உற்சாகப்படுத்திய மக்கள் கூட்டமே தேசவிடுதலையை அடையமுடியும்.

ஆகமொத்தத்தில், எல்லாளன் நடவடிக்கiயானது, சிறீலங்காப் படைகளின் போரிடும் வலிமையை மீண்டுமொருமுறை சிதைத்து, பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து, தமிழர்களின் படைபலத்தையும் ஒரு கட்டமைக்கப்பட்ட படையமைப்புக் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கிய பண்புகளையும், அதனூடக ஏற்படும் விளைவுகளையும் வெளிப்படுத்தி நிற்பதோடு, எதிர்காலப் போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதிக்கம் மேலோங்கப் போவதையும் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறது.

சிவஒளி

கட்டுநாயக்கா சுட்டிக் காட்டுகிறது விட்டு விடுதலையாகுவோம் நாமென்று.

Records from 29-03-2007 files

தமிழ் மக்கள் அவர்களின் தாயகத்திலே சிந்திய இரத்தத்துக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் கடும் குளிருக்குள் தங்கள் குருதியை உறைய வைத்து ஆற்றிய பணிக்குமான “முதற் கட்ட அறுவடை” மிகச் சிறப்பான முறையில் நிறைவேறியுள்ளது.

போராளிகள் மக்கள் என்னும் சமுத்திரத்துக்குள் நீந்தும் மீன்கள் என்பது பொருத்தமான நேரத்தில் புலனாகியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது.

புலிகளினுடைய பொறுமை தந்திரோபாய நகர்வா அன்றேல் உண்மையிலேயே போராளிகள் பலமிழந்து விட்டனரா என்ற “இக்கட்டு சிந்தனை” சிறீலங்கா அரச புலனாய்வுத் துறை தொடக்கம் பென்ரகன் வரை நிலவியது. புலிகள் எதிர்பார்த்த முதலாவது அடித்தள் வெற்றியே பல்வேறு தரப்பினரிடமும் உண்டான “இக்கட்டு சிந்தனை” தான். ஏனெனில், எந்த ஒரு போரிலும் எமது பலவீனத்தiயும் எதிரியின் பலத்தையும் பகுப்பாய்வு செய்வதென்பது முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நியதியாகும்.

தாக்குதலுக்கு முந்திய பகுப்பாய்வு வேவுத் தகவல்களிலேயே தங்கியுள்ளது. வேவு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் உண்மைக்கு புறம்பான வகையில் அமையுமாயின் முழு அளவிலான போரின் ஆரம்பமே அஸ்தமனத்தை நோக்கியதாகவே அமையும்.

வேவுத் தகவல் சேகரிப்பின் ஆக்கபூர்வ அமைவாக்கம் என்பது நுண்ணியதும் நுட்பமானதுமான தரவு சேகரிப்பில் தங்கியுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டே தாக்குதல் திட்டங்கள் தீட்டப்படுவது வழமை. ஆகவே ஒரு தரப்பு தனது எதியின் தாக்குதல் திட்டத்திற்கு அடிப்படையான வேவுத்தகவல் சேகரிப்பை குழப்பி விடுவதற்காக திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் செயற்படும். அதனூடக எதிரியின் தாக்குதல் திட்டத்தை முறியடிப்பது இலகு.

அதனைத்தான் (“இக்கட்டு சிந்தனை”) இலங்கைத் தீவினுடைய போராட்ட களத்தில் புலிப் போராளிகள் திட்ட மிட்டு மேற்கொண்டனர். புலிகளினுடைய இந்தப் பாணி ஒன்றும் புதியதல்ல ஆனால் அதன் வடிவம் புரிய கடினமானது. மூன்று தசாப்த காலத்தில் ஒருமுறை கூட புலிகளினுடைய இக்கட்டு சிந்தனை உண்டாக்கத்தை சிறீலங்கா அரசாலோ அன்றேல் அவர்களது படையினராலோ சரிவர கணிப்பிடமுடியாமை என்பதுவும் புலிகளுடைய வெற்றிகளுக்கான காரணங்களிலொன்றாகக் காணப்படுகிறது. வீரதுங்கா, அத்துலத் முதலி, ரஞ்சன் விஜேயரட்ண, அனுருத்த ரத்வத்த போன்றோர் எவ்வாறு புலிகளால் ஏமாற்றப்பட்டார்களோ அதுதான் இன்று கோத்தஅபய ராஜபக்சவுக்கும் நடக்கிறது.

இந்த உபாயம்தான் புலிகளினுடைய தந்திரோபாய வெற்றியாவும் சிங்களத்தின் தோல்வியாகவும் கொள்கைவகுப்பாளர்களால் கருதப்படுகிறது. இருப்பினும் சிங்களப் பேரினவாதம் இன்னும் தனது தவறுகளை நிவர்த்தி செய்ய யோசிக்காமல் தொடர்ந்தும் கனவுலகிலும் மாஜையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தான் மட்டும் இன்றி தனது மக்களையும் அவ்வாறே வாழத் தூண்டுகிறது.

இது போன்ற நிலையே “இறுதிப்போருக்கான நுழைவாயிலை” புலிகள் வெற்றிகரமாக திறப்பதற்கு துணைநின்றது. இந்த துணைநிற்றலின் தோற்றுவாயென்பது புலிகளால் உண்டாக்கப்பட்டதென்பதுதான் சிங்கள பேரினவாதத்துக்கு அச்சத்தை, அதிர்ச்சியை, ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. மேற்கூறிய மூன்று அம்சங்களும் என்றைக்குமே நிதானமாவும் புத்திசாதுர்யமாகவும் சிந்திக்க விடாது. நிதானமாவும் புத்திசாதுர்யமும் அற்ற சிந்தனையென்பது புதைகுழி நோக்கிய பயணமாகவே இருக்கும். இதனுடைய மறுதலை யாதெனில், தமிழர்களுடைய தளை நீக்கத்துக்கான போராட்டத்தின் விரைவு நிலையாகும்.

இந்த அடிப்படையிலேயே, கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது கடந்த மார்ச் 26ம் திகதி அதிகாலை 12.40 மணியளவில் தமிழீழ வான் புலிகள் ( வுயஅடை நுநடய யுசை வுபைநசள- வுநுயுவு) அல்லது தமிழீழ வான்; படையினர் ( வுயஅடை நுநடய யுசை குழசஉந- வுநுயுகு) நடத்திய அதிர்ச்சி மிகுந்த அதிரடித் தாக்குதலை நோக்குதல் பயன்மிக்கதாக அமையும்.

வான் புலிகளின் தோற்றம்.

தமிழீழ விடுதலை புலிகளிடம் வான் படைப் பிரிவும் உள்ளதென்பது 1998 ம் ஆண்டிலேயே தெரியவந்தது. 1998-11-27 மாவீரர் தினத்தன்று முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ வான் படையினரின் வானுர்தி;கள் மாவீரருக்கு மலர்தூவி அஞ்சலி செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. வான்புலிகளின் வளர்ச்சியில் கேணல் சங்கர் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. இவர் விமானப் பறப்பு தொடர்பான பயிற்சியையும் வான்படை உருவாக்கத்திற்கான படிப்;பையும் கனாடாவில் பெற்றதாக ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழீழ வான்படையின் விமானங்கள் வடக்கு வான்பரப்பில் பலதடவை பறந்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. விடுதலைப் புலிகளிடம் இலகு ரக விமானங்கள் இருப்பதென்பதை சிறீலங்கா படைகளின் உளவு விமானமான ருயுஏ படம் பிடித்திருந்த போதும் சுனாமி அனர்தத்தை தொடர்ந்து நிவாரணப் பணியென்ற போர்வையில் வந்த சில நாட்டின் பிரதிநிகளினாலேயே அது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் ஓரு தாக்குதல் இடம்பெற்று முடிந்த பின்னரும் கூட வான் புலிகளிடம் எந்த ரக விமானம் உள்ளதென்பதை யாரும் திட்டட்டமாகக் கூறவில்லை.

ZLIN Z- 143 அல்லது சுவிஸ் தயாரிப்பான பிளற்ரஸ் PC-7 அல்லது PC 21 இருக்கக் கூடுமென கருதப்படுகிறது. விமானப் பறப்புக்கான பயிற்சிகளை வான் புலிகள் கனடாவிலும் சுவிஸிலும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சுமார் 1250 மீற்றர் நீளமான விமான ஓடு பாதை இரணைமடுவிலும், புதுக்குடியிருப்புக்கு அண்மித்த பிரதேசத்திலும் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை இனங்கண்ட சிறீலங்கா விமானப் படை விமான ஓடுபாதையை வெற்றிகரமாகத் தாக்கி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வான்புலிகளின் தாக்குதலானது சிறீலங்கா விமானப் படையின் கூற்று பொய்யென நிரூபித்துள்ளது.

(இதனூடக பிரபாகரன் அவர்கள் மட்டுமல்ல தமிழர்களின் வான்படை கூட கதை முடிந்ததென்று சொன்ன பின்னர் மறுபிறப்பெடுக்கும் வல்லமை படைத்ததாக உள்ளது. ஆனால் வன்னியல் சிரஞ்சீவி மலை இருப்பதாகத் தெரியவில்லை.)

புலிகளைப் பொறுத்தவரை ஒரு மாதிரி போதும் பல அசல்களை உருவாக்க. தொழிட்நுட்ப ரீதியாக சிறப்பு நிலையடைந்தவர்கள்; கணிசமான தொகையினர் அவர்களிடம உள்ளனர். இவ்வாறானவர்களின் அர்ப்பணிப்பே ஜொனி மிதிவெடியாக, அருள் 81 மோட்டாராக, பசீலன் எறிகணையாக கடந்த காலத்தில் வெளிப்பட்டிருந்தது. சிறப்பத் தேர்ச்சி அடைந்தவர்களைக் கொண்ட புலிகளின் தொழில்நுட்பப் பிரிவினூடாக எதிர் காலத்தில் வானுர்திகளை உற்பத்தி செய்யக் கூடிய சாத்தியப்பாடுகளும் தென்படுகின்றன.

கொழும்பிலுள்ள நண்பர் ஒருவருடன் தொடர்பு கொண்டு வான் புலிகளின் தாக்குதல் தொடர்பாகக் கேட்ட போது பின்வருமாறு குறிப்பிட்டார்.” ஒரு காலத்தில் வேலுப்பிள்ளை அவர்களின் மகனால் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு தலைவலி இருந்து வந்தது. ஆனால், இனிமேல் பிரபாகரன் அவர்களின் மகனும் தென்னிலங்கைக்கு தலைவலியாக இருக்கத் தொடங்கி விட்டார்” என்பதே விமானத் தாக்குதல் சொல்லும் ஒரு சேதியாகும் எனக் குறிப்பிட்டார்.

வானுயர்ந்த புலிவீரம்

தற்கொலைத் தாக்கதல்களுக்கே புலிகள் விமானங்களை பயன்படுத்துவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், புலிகளோ தமது விமானங்களை அதிரடி நடவடிக்கைக்கு பயன்படுத்தியதுடன் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளார்கள. அதுவும் சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் பறப்பிலீடுபட்டிருக்கிறார்கள். இதிலுள்ள விசேட அம்சம் யாதெனில் ,

1. சிறீலங்காப் படையினரின் ராடர் கருவிகளுக்குள் சிக்காமல் சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் பறப்பிலீடுபட்டிருக்கிறார்கள்.

2. மின்குமிழ்களை ஒளிர விடாமல் பறப்பிலீடுபட்டனர்.

3. நடுநிசிப் பொழுதிலும் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள்.

4. புவியியல் அமைவுக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் புத்தளம், வில்பத்து போன்ற பகுதிகளில் மரங்களோடு உரசுவது போல் வானுர்திகளை செலுத்தியுள்ளார்கள்.

மேற்கூறப்பட்டது போன்ற விசேட அம்சங்கள் சிறீலங்கா விமானப் படையினராலேயே இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அப்படியிருக்கையில் வான்புலிகள் தமது திறமையை தமது நுழைவுத் தாக்குதலினூடாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வான் தாக்குதலின் நோக்கம்

மேற்குறிப்பிட்ட தாக்குதலானது தமிழர்களுக்கான தனியரசு என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் குறைந்தது ஐந்து குறிக்கோள்களை அடைவிலக்காகக் கொண்டிருக்கலாம். அவையாவன,

1. சிறீலங்கா விமானப் படையின் தாக்குதல் விமானங்களின் பலத்தையும் அதன் தொடர்பாடல் திறனையும் இயன்றவரை வலுவிழக்கச் செய்தல.

2. உளவியற் போரூடாக சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் மனோரீதியான தாக்கத்தை உண்டுபண்ணல்.

3. சிறீலங்காப் படைகளின் மையக் கவனத்தை சிதறடித்தல் அல்லது திசைதிருப்பல்.4. தமிழ் மக்களுக்கு தென்பூட்டல்

5. புலிகளின் பலத்தை நிரூபிப்பதனூடாக இராணுவ வலுச் சமநிலையின் உண்மை நிலையை வெளிப்படுத்தல்

6. புலிகளென்றால் யாரேன்பதை சிங்கள மக்கள், சிங்கள பேரினவாத அரசு மற்றும் சர்வதேச சமூகத்துக்கு புரியவைத்தல்.

அத்துடன், சிறீலங்கா விமானப் படையினின் தளத்துக்கு அருகிலே இருந்த சிவில் விமானத் தளத்துக்கோ அல்லது பயணிகளுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமை புலிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரசாங்கத்திற்கு இக்கட்டு நிலையை உண்டுபண்ணியுள்ளது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டு நிலை

சுமார் 270 நாட்களாக தாம் ஈட்டிய வெற்றியென அரசினால் காண்பிக்கப்பட்ட வெற்றிப் பெருமிதங்கள், மார்தட்டல்கள், கர்ச்சனைகள் போன்றவை எல்லாவற்றமையுமே சில வினாடிகளுக்கள் வீழ்ந்த மூன்று குண்டுகள் சிதறடித்துள்ளன. அரசு கூறுது போல் உண்மையிலேயே சிறீலங்கா வான்படையினருக்கு இழப்புகள் இல்லையாயின் ஏன் ஊடகவியலாளர்கள், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றை சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை? வாகரையிலும் சம்பூரிலும் தாம் வெற்றி பெற்றதாகக் கூறி அதனை காட்டுவதற்காக ஊடகவியலாளர்களை பாதுகாப்பற்றதும் தொலைவிலுள்ளதுமான பகுதிக்கு அழைத்து சென்ற அரசாங்த்தால் ஏன் கட்டுநாயக்காவிற்கு கூட்டிச் சென்று நடந்தது இதுதான் என விபரிக்க முடியவில்ல? இராஜதந்திரிகளையே கிழக்கு மாகாணத்திற்கு கூட்டிச் சென்றவர்கள் ஏன் கண்காணிப்புக் குழு கட்டுநாயக்க வானுர்தி தளத்துக்குள் பிரவேசிக்க முற்பட்டதைத் தடுத்தி நிறுத்தினார்கள்.

சரி, மேற்கூறியவற்றிற்கு அப்பால், ஊடகவியலாளர்களால் தேசிய நலுனுக்கு ஆபத்து என்றால், புலிகளின் கப்பல்களை கடலில் மூழ்கடித்ததாக தெரிவித்து கடற்படையினரால் எடுக்கப்பட்டவை எனக் கூறி புகைப்படங்களை வெளியிடுவது போல், புலிகளின் தாக்குதல்களால் என்ன நிகழ்ந்தது என்பதை உணர்த்தும் ஒரிரு புகைப்படங்களைக் கூட ஏன் வெளியிடப்படவில்லை?

இவையெல்லாவற்றிற்குமான விடை யாதெனில், அரசாங்கம் உண்மை வெளிவருவதை விரும்பவில்லையென்ற முடிவுக்கு சாதாரண மக்களை இட்டுச் செல்கிறது. அந்த உண்மைக்குள் அர்த்தம் பொதிந்த சேதி புதைந்துள்ளது. அது அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியை கொடுக்கும். அதற்காக பிரஜைகள் தமது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு இருக்கும் உரிமையை பொறுப்புள்ள அரசாங்கங்களால் மறுக்க முடியாது.
இந்தியாவினால் வழங்கப்ட்ட றேடர்கள் சரியாக செயற்படவில்லையென கூறி தமக்குள்ள பொறுப்பிலிருந்து பொறுப்பானவர்கள் நழுவ முடியாது. ஒரு நாட்டின் அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கையொன்று இடம்பெறுமாயின் உடனடியாகவே அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது செயலாளரோ பதவி விலகுவது உலக வழக்கம். இலங்கை உலக வழக்கத்தை பின்பற்றுகின்ற நாடெனில் யார் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லையென்பதை ஏற்றுக்கொண்டு பதவி விலகப் போகிறார்கள்?

இந்தியாவில் ஒரு ரயில் விபத்து இடம்பெற்றதற்கே அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் 24 மணி நேரத்துக்குள் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடகங்களின் பார்வையில் வான்புலிகளின் பாய்ச்சல்

இரட்டைக் கோபுரம் மற்றும் பென்ரகள் மீதான செப்டெம்பர் 11 வான் தாக்குதல், ஈராக் மீதான அமெரிக்க சார்பு படைகளின் வான் தாக்குதல், லெபனான் மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல் ஆகியவற்றுக்கு அண்மித்ததான முக்கியத்துவம் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தமிழீழ வான் புலிகளின் தாக்குதலுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

பிபிசி, சிஎன்என்,அல்ஜசீரா, வசிங்டன் போஸ்ட், த ஏஜ், ரைம்ஸ் போன்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஊடகங்கள் உலக வரலாற்றில் புரட்சிப் படையொன்றினால் நடத்ப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவென்றும், தாக்குதல் முறைமையானது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டுபண்ணியுள்ளது என்ற தொனியிலேயே செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இந்த தாக்குதல் சர்வதேச ரீதியில் புலிகளுக்கு பெரும் புகழ்மிகு பிரச்சாரத்தை வழங்கியிருந்ததை சிறீலங்கா அரசாங்ம் கூட மனதளவிலாவது உணர்ந்து கொண்டிருக்கும்.

தனியரசுக்கு தேவையான அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரு விடுதலை அமைப்பு தமிழர் தேசத்திலேயே உறுதியாகக் கால் பதித்து நிமிர்ந்து நிற்கிறது. விடுதலை அமைப்பு என்னும் பொழுது தனித்து இராணுவக் கட்டமைப்போடு மட்டும் நின்று விடாமல் சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளான காவல்துறை, நிதித் துறை, நீதி நிர்வாகத் துறை போன்ற துறைகளை முதன்முதலில் நிறுவி சிறப்பாக பேணிவரும் விடுதலைப் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்றும் அத்துடன் அவர்களிடம் மட்டுமே கடற்படையும் வான்படையும் உண்டென்பதுவும் மேற்கூறிய ஊடகங்களால் கூறப்பட்டிருந்தமை நினைவுகூரத் தக்கது.

பொருளாதாரத்திற்கு வீழ்ந்த அடி

தமிழீழ வான் புலிகளின் தாக்குதலானது பொருளாதார இலக்கொன்று தாக்கப்படும் முன்னரேயே சிறீலங்காவின் பொருளாதாரத்தை பாதாளத்தை நோக்கி தட்டி விட்டிருக்கிறது. பொருளாதாரமே ஒரு நாட்டின் உயிர்நாடி என்ற வகையில் சிறீலங்கா அரசாங்கம் அதனை முன்னேற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் சிதைத்துள்ளது. இதனூடாக உல்லாசத் துறை, பங்குச் சந்தை என்பனவற்றில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நியுஸீலாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்வதை இயன்றவரை தவிர்க்கும் படி தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவறுத்தியுள்ளன.

அத்துடன், எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதோடு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதி கிடைப்பதில் தேக்க நிலை ஏற்படக் கூடிய ஆபத்துக்களும் உண்டு. இதனூடாக பொருளாதாரம் வீழ்ச்சியடைவதோடு மக்களின் வாழ்கைச் செலவு அதிகரிக்கும்.

இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலா?

அரசாங்த்தாலும் அதன் பரிவாரங்களாலும் கூறப்படுவது போல் இது பயங்கரவாத் தாக்குலில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறுமுடியும். ஐ.நா உள்ளிட்ட சர்சதேச சமூகம் தாக்குதல் இடம்பெற்று சுமார் 72 மணிநேரம் கழிந்த நிலையிலும் தாக்குதல் தொடர்பான கண்டனத்தை தெரிவிக்காமை என்பது புலிகளினுடைய தாக்கதலுக்கான நியாயத்தை புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள் என எதிர்பார்க்க முடியும். பயங்கரவாத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா கூட சுமார் 72 மணிநேரமாகியும் கருத்தெதனையும் தெரிவிக்காமை, அவர்கள் பயங்கரவாத செயற்பாட்டிற்கும் விடுதலைப் போராட்டத்திற்குமிடையிலான வேறுபாட்டை அறிந்துள்ளார்கள் என்பதை அறிகுறியாகக் கொள்ளமுடியும்.

அரசாங்கம் தனக்கு ஏற்படவுள்ள பேராபத்தை சிந்திக்காமல் ஏன் அவசரப்பட்டு தென் ஆசியாவுக்கே புலிகளின் விமானப் படையால் ஆபத்து என அலட்டிக் கொள்கிறது? இது வான் புலிகளை தம்மால் தனித்து நின்று எதிர்க்க திரணியற்றதை வெளிப்படுத்துகிறது.

அரசாங்கம் போகிற போக்கில் வான் புலிகளின் விமானம் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டு ஈராக்கில் எண்ணெயை மீள் நிரப்பிவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டு தனது பயங்கரவாத கோசத்துக்கு வலுச் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அத்துடன் முன்னாள் றோ அதிகரியும் தற்போதைய அரசியல் இராணுவ ஆய்வாளருமான பி.ராமன் குறிப்பிடுவது போல் வான்புலிகளால் தமிழ் நாட்டுக்கோ இந்தியாவுக்கோ எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. தமிழீழ வீடுதலைப் புலிகளோடு ஏனைய எந்த இயக்கங்களையும் ஒப்பிடமுடியாது. ஏனெனில் புலிகளின் கட்டமைப்பும் அவர்களுடைய பரிமாண வளர்ச்சியும் யாருடனும் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாதது. அப்படியிருக்கையில் உல்பா மற்றும் அசாம் இயக்கங்களை புலிகளின் வல்லமை, நுட்பங்களுடன் ஒப்பிட முடியாது. உல்பா மற்றும் அசாம் இயக்கங்களுக்கு ஒரு விமான தளத்தை அமைத்து பேணிப்பாதுகாக்க முடியுமா என்பது கேள்விக்குறியான விடயமே. ஏனெனில் அவர்களுடைய தளங்கள் பெரும்பாலம் நகரும் தளங்களாகவும், பெரும் நிலப்பரப்பு அவர்களின் நேரடியான கட்டுபட்பாட்டில் இல்லையென்பதுவும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியவையாகும்.

இவையல்லாவற்றுக்குமப்பால் தமது ஆளுகைக்கு உட்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய தட்டிக் கழிக்க முடியாத பொறுப்பு புலிகளுக்கு உண்டு. ஆகவே தமது மக்களை சிறீலங்காப் படையினரின் தாக்குதலிருந்து பாதுகாப்பதன் ஒரு அங்கமான முன்னேற்பாட்டு தாக்குதலை பயங்கரவாத் தாக்குதலென்று மூளை சரியாக இயங்குபவர்கள் சொல்ல மாட்டார்கள்.

தமிழர்களுக்குள்ள தார்மீக பொறுப்பு

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் அதன் அடைவிலக்கு நோக்கிய இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. இறுதி அத்தியாயம் வெற்றிகரமாகவும் விரைவானவும் நிறைவு செய்யப் பட வேண்டுமானால் அதில் ஒவ்வொரு தமிழனுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனூடாவே தமிழ் தேசியத்தை வலுப்படுத்த முடியும்.

ஆதலால் வடக்கு கிழக்கு தமிழர், மலையகத் தமிழர், இந்தியா வம்சாவளித் தமிழர், தமிழ் நாட்டு தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் எனக் கூறுபட்டுபோய் நிற்காமல் தமிழன் என்ற ஒரே அடையாளத்திற்காய் ஒன்றுபட்டு போராட்ட சக்கரம் வேகமாகச் சுழன்று இலக்கையடைவதற்கு தமது பங்களிப்பை இதயசுத்தியுடன் நல்க வேண்டும். போரட்ட பங்களிப்பென்பது தனித்து ஆயுதம் தூக்குவது மட்மல்ல. அது எங்களது தலைவிதியை நாமே அமைத்துக் கொள்வதற்கான பேனா தூக்குவதாக, பொருளாதார ரீதியானதாக (நிதியை நல்குவதாக), மனோரீதியான பலத்தை ஊட்டுவதாக, புலனாய்வு ரீதியாக, கலை இலக்கிய ரீதியாக, அரசியல் ரீதியாக என்று பல்வேறு தளங்களில் நின்று தமது பங்களிப்பை ஒவ்வொரு தமிழனும் வழங்க முன்வர வேண்டும்.

“இராணுவத்துக்கு பலத்த அடி கொடுதால் எங்கட பெடியாள் என்பதற்கும்காரணத்தோடு காத்திருந்தால் இவங்கள் என்ன செய்யிறாங்கள் என்பதற்கும்” தமிழர்களுடைய போராட்டம் ஒன்றும் கிரிக்கட் ஆட்டமல்ல என்பதை என்றும் நினைவிற் கொள்ள வேண்டும்.

எமக்கான விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும், அதற்கு மிகப் பொருத்தமான தலைமை எமக்குண்டு. அந்த தலைமையின் கீழ் ஒன்று திரண்டு எமது அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காகவும் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்காகவும் நாம் மேலே குறிப்பிட்டது போல் உடனடியாகவே களத்திலிறங்க வேண்டும்.

பாதச்சுவடுகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப எமக்கான விடுதலை விரைவு பெறும்.

சிவஒளி

இல்லை…இல்லை…

Records from 2006 files

உணவுக்கு மரவள்ளிகூட இல்லை
உயிர்காக்க மருந்தில்லை
நத்தாருக்கு கேக் அடிக்க மாஜரினில்லை
பொங்கலுக்கு சக்கரையில்லை
பாறணைக்கு காய்கறியில்லை
பள்ளிசெல்லும் பையனுக்கு
குமுழ்முனை பேனையில்லை
குழந்தைக்கு பால்மாயில்லை
எக்ஸ்றே இயந்திரத்துக்குஎனேஜி இல்லை
எக்ஸ்போவில் ரிக்கறில்லை
ஏரியாகொமாண்டரிடம் கிளியரன்ஸ் இல்லை.

ஏ நைனுக்கு விழிப்பில்லை
மரக்கறிக்கு உரமில்லை
சந்தையில் மீனில்லை
விலைவாசிக்கு குறைவில்லை
தேரிழுக்க பக்தனில்லை
ஏர்பிடிக்க வலுவில்லை
மனித உரிமைக்கு மதிப்பில்லை
சிந்தும் குருதிக்கு பெறுமதியில்லை
விசாரணைகளுக்கு முடிவில்லை
மிகிந்தலைக்கு பாதையில்லை
மகிந்தரின் திமிருக்கு எல்லையில்லை.
சிறீலங்காவின் அழிவுக்கு நாள் தூரமில்லை.

இரத்தின “மை”

சுதந்திரமே சுவாசம்….

Records from 2006 files

கரையேற வழியின்றி தவிக்கின்ற
வாகரை மக்களின் கண்ணீர்
தென்னிலங்கை வானில் மழையாக…

நேற்றுவரை நாமிருந்த வீடு-அதில்
நிமிர்ந்து நடந்த சுவடுகள்,
கூடவே வாழ்ந்த உறவுகள்…
இன்று திசைக்கொன்றாய்பசித்த வயிற்றுடன்.

வனந்தரமே வாழ்கiகையாகி
மரக்கிளையே கூரையாகி
விழுதுகளே ஏணைகளாகி
வேர்களே தாய்மடியாகி
மழைநீரே தாய்முலையாகி
தாண்டவம் ஆடுதுதமிழன் அவலம்.
மீண்டும் துளிர்க்கும்வசந்த்ததை எதிர்பார்த்து.

எறிகணையானலும் எதிர்த்து நிற்போம்.
சாவையும் சந்திக்க தயாராகுவோம் - ஆனால்
சரணகதியடையோம் சபதம் கொள்வோம்.

நெருப்பாற்றையே கடக்க துணிந்த எங்களுக்கு
மாவிலாறொன்றும் மரணப்பொறியல்ல மனங்கொள்வோம்.

முகமாலையில் மூக்குடைபட்ட
துட்டகைமுனுவின் புத்திரர்களே!
மீண்டும் ஏன்தலையை
மலையில் மோதமுயற்சிக்கிறீர்கள்?

சுட்டெரிக்கம் சூரியனின்சாட்சியாக சொல்கிறோம்
எம்மை தொட்டவர் கரம்வெட்டியெறிவோம்.
முட்டிய பகையுடன் மோதிக்கதைமுடிப்போம்.

“சுதந்திரமே சுவாசம் எனக்கொள்வோம்
விடுதலையை விரைவாய் அடைவோம்.”

இரத்தின “மை”

அலரிமாளிகை கோயபல்சுக்கு ஒரு அவசரக் கடிதம்.

Records from 2-2-2007 file.

அன்புள்ள கேகலிய வ(ர)ம்புக்கெலவிற்கு வணக்கம்.
உங்கள் நலத்திற்கு கண்டி மகாநாயக்க தேரர்கள் அருள்புரிவார்களாக.வழக்கம் போலவே வற்றாப்பளை அம்மன் குறைவைக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழ்கின்றோம். எங்கள் வாழ்க்கை நம்பிக்கையுடன் நகர்கிறது. ஏங்கள் நம்பிக்கைகள் என்றைக்கும் வீண் போனதும் கிடையாது.

அண்ணை எங்களுக்கோ ஏகப்பட்ட ஏற்பாடுகள் அதற்கு மத்தியிலும் இந்த மடலை உங்களுக்கு அவசரப்பட்டு ஏன் எழுதுறன் தெரியுமோ?காலிதுறைமுகம் மீது நடத்தப்ட்ட தாக்குதலைத் தொடாந்து பிபிசி வழங்கிய செய்தி அறிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்.காலி ஒரு சுற்றுலா நகரமே அல்ல எனவும் பிபிசி தவறான தகவலை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். மானத்தமிழருக்கு நீங்கள் அண்டப் புழுகன் என்பது தெரியும். ஆனால் நீங்கள் உங்களுக்கு பிச்சை போடுகிற நாடுகளுக்கெல்லோ சொல்லிப்போட்டியள்.

அவையென்னன்டா காலி நகரிலேயே வந்து நின்று காலியின் சுற்றுலா சிறப்பையல்லோ சொல்லியிருக்கினம்.

உலகவங்கியின் தென்னாசிய பிராந்தியத்துக்கான உப தலைவரான பிறபுல் பற்றல் ஐயா எங்கட பீற்ற கெறல்ட் ஐயாவையே விஞ்சிப்போட்டார். பிறபுல் பற்றல் ஐயா உரையாற்றும் போது “ஆயுபோவன்” என மட்டும் கூறியதிலிருந்து சிறீலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறிப்போட்டார்;. அப்படி என்றால் தமிழர்களுக்கென்று ஒரு தேசம் இருக்கென்றுதானே அர்த்தப்படுத்துகிறார். அதுமட்டுமில்லை ஒல்லாந்தரால் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க காலி துறைமுகம் என்றும் சுற்றுலா துறையினரை கவரும் முகமாக உலகளாவிய ரீதியில் பெயர்பெற்ற கட்டிட கலைஞரான ஜொப்றி பாபாவால் காலி கோட்டையின் நுழைவாயில் வடிவமைக்கப்பட்டதென்றும் கூறியுள்ளார். சரி அவற்றை உரையை விடுவம் நீங்களே காலி சுற்றுலா தளம் என்பதை நிரூபித்துப் போட்டீர்களே. இந்த நிமிடம் வரை 107 அமைச்சர்களை கொண்ட சிறீலங்கா அரசாங்கம் இலங்கை அபிவிருதித்தி சபை என்ற பெயரில் பிச்சை எடுப்பதற்காக நடத்திய நிகழ்வை காலியில் அதுவும் ஐந்து நட்சத்திர விடுதியில் (லைற் கவுஸ் கொட்டலில்) நடத்தியிருக்கிறீர்களே. இது ஒரு மிக நுண்ணிய உதாரணம் மட்டுமே உங்களுடைய அண்டப்புளுகுக்கு.

வெள்ளை மாளிகைக்கோ அல்லது அகாசி ஐயாவுக்கோ எழுதியது போல் நீண்ட கடிதத்தை உங்களுக்கு எழுத நான் விரும்பவில்லை. தானத்தில் வாழ்கின்ற தலாதா மாளிகைக்கே நாங்கள் புஸ்வானமாக தெரிந்தால் வற்றாப்பளைக்கு தனது மிடுக்கை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. கெடுபிடி சொல் கேளாது என்பது போல் உங்களுக்கு “இடிதான்” சரி. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. துட்டகைமுனுக்களாக காட்டிக்கொள்ள விரும்பும் உங்களில் பலர் ஏன் சுத்த முட்டாள்களாவே இருக்கிறாhர்கள்? அடிக்கடி எங்கள் புத்திரர்களில் எத்தனை சதவீதம் உள்ளனர் என்றும் எவ்வளவு நிலப்பரப்பு எங்கள் புத்திரர்களிடம் உள்ளது என்றும் கூறும் நீங்கள் ஏன் கடந்த கால வரலாற்றுப் பாடங்களை கற்றுக்கொள்ளாதது போல் காட்டிக்கொள்கிறீர்கள்?

மணலாற்று காட்டுக்குள் நுழைந்த மாற்றான் படை 24மணித்தியாலத்துக்குள் எங்கள் தலைவரை பிடித்துவிடுவோம் என மார்தட்டியது. கடைசியில் கதறிக் கதறி ஓடினார்கள். லெப் கேணல் ஜொனியை பொறியாக வைத்தவர்களுக்கு ஜொனியின் பெயராலேயே புதைகுழி அமைத்தோம்.

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்ததோடு புலிகள் 90சதவீதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஓலமிட்டார் ரத்வத்தை இறுதியில் ஒப்பாரியெல்லோ வைத்துக்கொண்டு திரிந்தவர். யாழ்ப்பாண வீழ்ச்சிக்குப் பிறகு எமது போராளிகளின் கதை முடிந்ததாக உங்கள் இராணுவ வல்லுனர்கள் கற்பனை பண்ணிய பிற்பாடுதானே ஈழப்போரிலே புதிய உத்வேகமும் எழுச்சியும் பிறந்தது. இரண்டு வருடங்கள் அலைக்கழிந்து தெற்குப்பதியில் மாங்குளம் வரையும் வடக்கில் கிளிநொச்சி வரையும் வந்தபிற்பாடு என்ன நடந்தது? 3நாட்களுக்குள் துட்டகைமுனுக்களின் கொட்டம் அடக்கினோம்.

கொக்காவிலில் இறுதிச் சடங்கு நடத்திய பின்பு சுமார் 240வருடங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாகவும் கௌரவப் போருக்கும் வழிவகுத்த ஆனையிறவுக்கான ஈமச்சடங்கை கட்டுநாயக்காவில் நடத்தியது தமிழர்படை. குறைவைக்க கூடாது என்பதற்காக தீச்சுவாலைக்கும் இலட்சார்ச்ச அர்ச்சனை நடத்தினார்கள் புலிகள்.

வெள்ளைக்காரன் வீடு தேடிவந்ததற்காகவும் எமக்கு சமாதானத்தின் மீதும் அமைதியின் மீதும் இருந்த அக்கறையை வெளிப்படுத்துவதற்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நயவஞ்சகர் ரணிலோடு இணைந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்.

பலஸ்தீனத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சுக்களுக்கு உண்டான நிலைதொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தேசியத் தலைவர் என்ன பதில் சொன்னர் என்பது தெரியும்தானே. வன்முறையை நாமாக என்றைக்குமே தெரிந்தெடுபதில்லை என்பதற்கு அதுவும் நல்ல உதாரணம். ஆனால் எங்களுக்கு பேச்சுக்களுக்கு போக முன்னரேயே சமாதானப்பேச்சுவார்த்தைகள் விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்று தெரிந்திருந்தும் இராணுவ வலுச்சமநிலையை தமிழர்களுக்கு சார்பாக மாற்றியமைத்த பின்னரும் புதிய உலக ஒழுங்கிற்கு அமைவாக எமது உபாயங்களை மாற்றியமைத்தோம்.

நீங்கள் என்னவென்றால் புலி புஸ்வானம் என்றும் அவார்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டதாகவும் முல்லைத்தீவுக்கு நெருக்கடி கொடுப்போம் என்று முழங்கி கொட்டுகிறீர்கள்.

திருமலை மீது எங்களின் ஒரு எறிகணை விழும் என்றாலே அது உங்களுக்கு பெரும் தலையிடியை கொடுக்கும், ஆனால் எமது தேசத்தின் விடுதலைக்காக தமிழர்படை செய்யவிருப்பதோ என்றைக்கும் மீள முடியாத அதிர்ச்சி.அதற்கு அமெரிக்கா பாகிஸ்தான் என்ன யார் வந்தாலுமே ஒக்சியன் தரமுடியாது.

புதிய இராணுவ உத்திகளால் புலிகள் நிலைகுலைந்து போயிப்பதாக கூறுகிறீர்கள். மக்களை பட்டினி போட்டு அவர்கள் மீது எறிகணைகளை ஏவி கொன்றொழிப்பது புதிய இராணவ உத்தியா?

சம்ப+ரை கைப்பற்றியமைக்காக வனிலா கேக் வெட்டி வாகரைக்கு சொக்லேட் கேக் வெட்டிய உங்களுக்கு சீனியும் கொழுப்பும் கூடிப்போய்விட்டது. தமிழீழத்துக்கு அண்மையில் உள்ள ஒரு நாட்டுகாரருக்கு உந்நநிலை வரக்கூடாது பாருங்கோ. நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்காததை எங்களால் செய்து முடிக்க இயலும். இதை செய்தும் காட்டியிருக்கிறம். இது அமெரிக்கருக்கும் தெரியும் ஐரோப்பிய ஒன்றியத்தினருக்கும் தெரியும். ஆதலால்தான் அவர்களுக்கு எங்கள் மீது ஏகப்பட்ட “அக்கறை”.
இதோ உங்களுக்கு விரைவில் வேப்பம் ப+ வடகத்தில் கேக் செய்து அனுப்பப் போகிறோம். எலும்பு துண்டை நக்கி திரிகிறவர்களுக்குமாக சேர்த்து. புரிகிறதா? என்ன செய்ய உங்களுக்கு புலியினுடைய வழியும் தெரியவில்லை அவர்களிகளின் மொழியும் புரியவில்லை.

சுமார் மூன்று தசாப்த காலப்பகுதியில் ஐந்து ஐனாதிபதிகள் ஆறிற்கு மேற்பட்ட பாதுகாப்பு அமைச்சர்கள் முப்பதிற்கும் மேற்பட்ட படைத்தளபதிகள் இவர்கள் அனைவரிற்கும் எதிராக ஒரேயொரு தலைவன் பிரபாகரன்தான் அவதாரமெடுத்துள்ளான்.இதையாவது ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நன்று.
மீதியை புதுவருட கிரிபத்தோடு சேர்த்து அனுப்புகிறேன். பிரித் நூலவது காப்பாற்றுகின்றதா எனப் பார்ப்போம்.

நன்றி.

அன்புடன்
சிவஒளி.