தமிழ்த் தேசியவாதி

Friday, October 31, 2008

கட்டுநாயக்கா சுட்டிக் காட்டுகிறது விட்டு விடுதலையாகுவோம் நாமென்று.

Records from 29-03-2007 files

தமிழ் மக்கள் அவர்களின் தாயகத்திலே சிந்திய இரத்தத்துக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் கடும் குளிருக்குள் தங்கள் குருதியை உறைய வைத்து ஆற்றிய பணிக்குமான “முதற் கட்ட அறுவடை” மிகச் சிறப்பான முறையில் நிறைவேறியுள்ளது.

போராளிகள் மக்கள் என்னும் சமுத்திரத்துக்குள் நீந்தும் மீன்கள் என்பது பொருத்தமான நேரத்தில் புலனாகியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது.

புலிகளினுடைய பொறுமை தந்திரோபாய நகர்வா அன்றேல் உண்மையிலேயே போராளிகள் பலமிழந்து விட்டனரா என்ற “இக்கட்டு சிந்தனை” சிறீலங்கா அரச புலனாய்வுத் துறை தொடக்கம் பென்ரகன் வரை நிலவியது. புலிகள் எதிர்பார்த்த முதலாவது அடித்தள் வெற்றியே பல்வேறு தரப்பினரிடமும் உண்டான “இக்கட்டு சிந்தனை” தான். ஏனெனில், எந்த ஒரு போரிலும் எமது பலவீனத்தiயும் எதிரியின் பலத்தையும் பகுப்பாய்வு செய்வதென்பது முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நியதியாகும்.

தாக்குதலுக்கு முந்திய பகுப்பாய்வு வேவுத் தகவல்களிலேயே தங்கியுள்ளது. வேவு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் உண்மைக்கு புறம்பான வகையில் அமையுமாயின் முழு அளவிலான போரின் ஆரம்பமே அஸ்தமனத்தை நோக்கியதாகவே அமையும்.

வேவுத் தகவல் சேகரிப்பின் ஆக்கபூர்வ அமைவாக்கம் என்பது நுண்ணியதும் நுட்பமானதுமான தரவு சேகரிப்பில் தங்கியுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டே தாக்குதல் திட்டங்கள் தீட்டப்படுவது வழமை. ஆகவே ஒரு தரப்பு தனது எதியின் தாக்குதல் திட்டத்திற்கு அடிப்படையான வேவுத்தகவல் சேகரிப்பை குழப்பி விடுவதற்காக திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் செயற்படும். அதனூடக எதிரியின் தாக்குதல் திட்டத்தை முறியடிப்பது இலகு.

அதனைத்தான் (“இக்கட்டு சிந்தனை”) இலங்கைத் தீவினுடைய போராட்ட களத்தில் புலிப் போராளிகள் திட்ட மிட்டு மேற்கொண்டனர். புலிகளினுடைய இந்தப் பாணி ஒன்றும் புதியதல்ல ஆனால் அதன் வடிவம் புரிய கடினமானது. மூன்று தசாப்த காலத்தில் ஒருமுறை கூட புலிகளினுடைய இக்கட்டு சிந்தனை உண்டாக்கத்தை சிறீலங்கா அரசாலோ அன்றேல் அவர்களது படையினராலோ சரிவர கணிப்பிடமுடியாமை என்பதுவும் புலிகளுடைய வெற்றிகளுக்கான காரணங்களிலொன்றாகக் காணப்படுகிறது. வீரதுங்கா, அத்துலத் முதலி, ரஞ்சன் விஜேயரட்ண, அனுருத்த ரத்வத்த போன்றோர் எவ்வாறு புலிகளால் ஏமாற்றப்பட்டார்களோ அதுதான் இன்று கோத்தஅபய ராஜபக்சவுக்கும் நடக்கிறது.

இந்த உபாயம்தான் புலிகளினுடைய தந்திரோபாய வெற்றியாவும் சிங்களத்தின் தோல்வியாகவும் கொள்கைவகுப்பாளர்களால் கருதப்படுகிறது. இருப்பினும் சிங்களப் பேரினவாதம் இன்னும் தனது தவறுகளை நிவர்த்தி செய்ய யோசிக்காமல் தொடர்ந்தும் கனவுலகிலும் மாஜையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தான் மட்டும் இன்றி தனது மக்களையும் அவ்வாறே வாழத் தூண்டுகிறது.

இது போன்ற நிலையே “இறுதிப்போருக்கான நுழைவாயிலை” புலிகள் வெற்றிகரமாக திறப்பதற்கு துணைநின்றது. இந்த துணைநிற்றலின் தோற்றுவாயென்பது புலிகளால் உண்டாக்கப்பட்டதென்பதுதான் சிங்கள பேரினவாதத்துக்கு அச்சத்தை, அதிர்ச்சியை, ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. மேற்கூறிய மூன்று அம்சங்களும் என்றைக்குமே நிதானமாவும் புத்திசாதுர்யமாகவும் சிந்திக்க விடாது. நிதானமாவும் புத்திசாதுர்யமும் அற்ற சிந்தனையென்பது புதைகுழி நோக்கிய பயணமாகவே இருக்கும். இதனுடைய மறுதலை யாதெனில், தமிழர்களுடைய தளை நீக்கத்துக்கான போராட்டத்தின் விரைவு நிலையாகும்.

இந்த அடிப்படையிலேயே, கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது கடந்த மார்ச் 26ம் திகதி அதிகாலை 12.40 மணியளவில் தமிழீழ வான் புலிகள் ( வுயஅடை நுநடய யுசை வுபைநசள- வுநுயுவு) அல்லது தமிழீழ வான்; படையினர் ( வுயஅடை நுநடய யுசை குழசஉந- வுநுயுகு) நடத்திய அதிர்ச்சி மிகுந்த அதிரடித் தாக்குதலை நோக்குதல் பயன்மிக்கதாக அமையும்.

வான் புலிகளின் தோற்றம்.

தமிழீழ விடுதலை புலிகளிடம் வான் படைப் பிரிவும் உள்ளதென்பது 1998 ம் ஆண்டிலேயே தெரியவந்தது. 1998-11-27 மாவீரர் தினத்தன்று முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ வான் படையினரின் வானுர்தி;கள் மாவீரருக்கு மலர்தூவி அஞ்சலி செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. வான்புலிகளின் வளர்ச்சியில் கேணல் சங்கர் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. இவர் விமானப் பறப்பு தொடர்பான பயிற்சியையும் வான்படை உருவாக்கத்திற்கான படிப்;பையும் கனாடாவில் பெற்றதாக ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழீழ வான்படையின் விமானங்கள் வடக்கு வான்பரப்பில் பலதடவை பறந்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. விடுதலைப் புலிகளிடம் இலகு ரக விமானங்கள் இருப்பதென்பதை சிறீலங்கா படைகளின் உளவு விமானமான ருயுஏ படம் பிடித்திருந்த போதும் சுனாமி அனர்தத்தை தொடர்ந்து நிவாரணப் பணியென்ற போர்வையில் வந்த சில நாட்டின் பிரதிநிகளினாலேயே அது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் ஓரு தாக்குதல் இடம்பெற்று முடிந்த பின்னரும் கூட வான் புலிகளிடம் எந்த ரக விமானம் உள்ளதென்பதை யாரும் திட்டட்டமாகக் கூறவில்லை.

ZLIN Z- 143 அல்லது சுவிஸ் தயாரிப்பான பிளற்ரஸ் PC-7 அல்லது PC 21 இருக்கக் கூடுமென கருதப்படுகிறது. விமானப் பறப்புக்கான பயிற்சிகளை வான் புலிகள் கனடாவிலும் சுவிஸிலும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சுமார் 1250 மீற்றர் நீளமான விமான ஓடு பாதை இரணைமடுவிலும், புதுக்குடியிருப்புக்கு அண்மித்த பிரதேசத்திலும் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை இனங்கண்ட சிறீலங்கா விமானப் படை விமான ஓடுபாதையை வெற்றிகரமாகத் தாக்கி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வான்புலிகளின் தாக்குதலானது சிறீலங்கா விமானப் படையின் கூற்று பொய்யென நிரூபித்துள்ளது.

(இதனூடக பிரபாகரன் அவர்கள் மட்டுமல்ல தமிழர்களின் வான்படை கூட கதை முடிந்ததென்று சொன்ன பின்னர் மறுபிறப்பெடுக்கும் வல்லமை படைத்ததாக உள்ளது. ஆனால் வன்னியல் சிரஞ்சீவி மலை இருப்பதாகத் தெரியவில்லை.)

புலிகளைப் பொறுத்தவரை ஒரு மாதிரி போதும் பல அசல்களை உருவாக்க. தொழிட்நுட்ப ரீதியாக சிறப்பு நிலையடைந்தவர்கள்; கணிசமான தொகையினர் அவர்களிடம உள்ளனர். இவ்வாறானவர்களின் அர்ப்பணிப்பே ஜொனி மிதிவெடியாக, அருள் 81 மோட்டாராக, பசீலன் எறிகணையாக கடந்த காலத்தில் வெளிப்பட்டிருந்தது. சிறப்பத் தேர்ச்சி அடைந்தவர்களைக் கொண்ட புலிகளின் தொழில்நுட்பப் பிரிவினூடாக எதிர் காலத்தில் வானுர்திகளை உற்பத்தி செய்யக் கூடிய சாத்தியப்பாடுகளும் தென்படுகின்றன.

கொழும்பிலுள்ள நண்பர் ஒருவருடன் தொடர்பு கொண்டு வான் புலிகளின் தாக்குதல் தொடர்பாகக் கேட்ட போது பின்வருமாறு குறிப்பிட்டார்.” ஒரு காலத்தில் வேலுப்பிள்ளை அவர்களின் மகனால் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு தலைவலி இருந்து வந்தது. ஆனால், இனிமேல் பிரபாகரன் அவர்களின் மகனும் தென்னிலங்கைக்கு தலைவலியாக இருக்கத் தொடங்கி விட்டார்” என்பதே விமானத் தாக்குதல் சொல்லும் ஒரு சேதியாகும் எனக் குறிப்பிட்டார்.

வானுயர்ந்த புலிவீரம்

தற்கொலைத் தாக்கதல்களுக்கே புலிகள் விமானங்களை பயன்படுத்துவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், புலிகளோ தமது விமானங்களை அதிரடி நடவடிக்கைக்கு பயன்படுத்தியதுடன் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளார்கள. அதுவும் சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் பறப்பிலீடுபட்டிருக்கிறார்கள். இதிலுள்ள விசேட அம்சம் யாதெனில் ,

1. சிறீலங்காப் படையினரின் ராடர் கருவிகளுக்குள் சிக்காமல் சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் பறப்பிலீடுபட்டிருக்கிறார்கள்.

2. மின்குமிழ்களை ஒளிர விடாமல் பறப்பிலீடுபட்டனர்.

3. நடுநிசிப் பொழுதிலும் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள்.

4. புவியியல் அமைவுக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் புத்தளம், வில்பத்து போன்ற பகுதிகளில் மரங்களோடு உரசுவது போல் வானுர்திகளை செலுத்தியுள்ளார்கள்.

மேற்கூறப்பட்டது போன்ற விசேட அம்சங்கள் சிறீலங்கா விமானப் படையினராலேயே இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அப்படியிருக்கையில் வான்புலிகள் தமது திறமையை தமது நுழைவுத் தாக்குதலினூடாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வான் தாக்குதலின் நோக்கம்

மேற்குறிப்பிட்ட தாக்குதலானது தமிழர்களுக்கான தனியரசு என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் குறைந்தது ஐந்து குறிக்கோள்களை அடைவிலக்காகக் கொண்டிருக்கலாம். அவையாவன,

1. சிறீலங்கா விமானப் படையின் தாக்குதல் விமானங்களின் பலத்தையும் அதன் தொடர்பாடல் திறனையும் இயன்றவரை வலுவிழக்கச் செய்தல.

2. உளவியற் போரூடாக சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் மனோரீதியான தாக்கத்தை உண்டுபண்ணல்.

3. சிறீலங்காப் படைகளின் மையக் கவனத்தை சிதறடித்தல் அல்லது திசைதிருப்பல்.4. தமிழ் மக்களுக்கு தென்பூட்டல்

5. புலிகளின் பலத்தை நிரூபிப்பதனூடாக இராணுவ வலுச் சமநிலையின் உண்மை நிலையை வெளிப்படுத்தல்

6. புலிகளென்றால் யாரேன்பதை சிங்கள மக்கள், சிங்கள பேரினவாத அரசு மற்றும் சர்வதேச சமூகத்துக்கு புரியவைத்தல்.

அத்துடன், சிறீலங்கா விமானப் படையினின் தளத்துக்கு அருகிலே இருந்த சிவில் விமானத் தளத்துக்கோ அல்லது பயணிகளுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமை புலிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரசாங்கத்திற்கு இக்கட்டு நிலையை உண்டுபண்ணியுள்ளது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டு நிலை

சுமார் 270 நாட்களாக தாம் ஈட்டிய வெற்றியென அரசினால் காண்பிக்கப்பட்ட வெற்றிப் பெருமிதங்கள், மார்தட்டல்கள், கர்ச்சனைகள் போன்றவை எல்லாவற்றமையுமே சில வினாடிகளுக்கள் வீழ்ந்த மூன்று குண்டுகள் சிதறடித்துள்ளன. அரசு கூறுது போல் உண்மையிலேயே சிறீலங்கா வான்படையினருக்கு இழப்புகள் இல்லையாயின் ஏன் ஊடகவியலாளர்கள், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றை சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை? வாகரையிலும் சம்பூரிலும் தாம் வெற்றி பெற்றதாகக் கூறி அதனை காட்டுவதற்காக ஊடகவியலாளர்களை பாதுகாப்பற்றதும் தொலைவிலுள்ளதுமான பகுதிக்கு அழைத்து சென்ற அரசாங்த்தால் ஏன் கட்டுநாயக்காவிற்கு கூட்டிச் சென்று நடந்தது இதுதான் என விபரிக்க முடியவில்ல? இராஜதந்திரிகளையே கிழக்கு மாகாணத்திற்கு கூட்டிச் சென்றவர்கள் ஏன் கண்காணிப்புக் குழு கட்டுநாயக்க வானுர்தி தளத்துக்குள் பிரவேசிக்க முற்பட்டதைத் தடுத்தி நிறுத்தினார்கள்.

சரி, மேற்கூறியவற்றிற்கு அப்பால், ஊடகவியலாளர்களால் தேசிய நலுனுக்கு ஆபத்து என்றால், புலிகளின் கப்பல்களை கடலில் மூழ்கடித்ததாக தெரிவித்து கடற்படையினரால் எடுக்கப்பட்டவை எனக் கூறி புகைப்படங்களை வெளியிடுவது போல், புலிகளின் தாக்குதல்களால் என்ன நிகழ்ந்தது என்பதை உணர்த்தும் ஒரிரு புகைப்படங்களைக் கூட ஏன் வெளியிடப்படவில்லை?

இவையெல்லாவற்றிற்குமான விடை யாதெனில், அரசாங்கம் உண்மை வெளிவருவதை விரும்பவில்லையென்ற முடிவுக்கு சாதாரண மக்களை இட்டுச் செல்கிறது. அந்த உண்மைக்குள் அர்த்தம் பொதிந்த சேதி புதைந்துள்ளது. அது அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியை கொடுக்கும். அதற்காக பிரஜைகள் தமது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு இருக்கும் உரிமையை பொறுப்புள்ள அரசாங்கங்களால் மறுக்க முடியாது.
இந்தியாவினால் வழங்கப்ட்ட றேடர்கள் சரியாக செயற்படவில்லையென கூறி தமக்குள்ள பொறுப்பிலிருந்து பொறுப்பானவர்கள் நழுவ முடியாது. ஒரு நாட்டின் அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கையொன்று இடம்பெறுமாயின் உடனடியாகவே அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது செயலாளரோ பதவி விலகுவது உலக வழக்கம். இலங்கை உலக வழக்கத்தை பின்பற்றுகின்ற நாடெனில் யார் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லையென்பதை ஏற்றுக்கொண்டு பதவி விலகப் போகிறார்கள்?

இந்தியாவில் ஒரு ரயில் விபத்து இடம்பெற்றதற்கே அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் 24 மணி நேரத்துக்குள் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடகங்களின் பார்வையில் வான்புலிகளின் பாய்ச்சல்

இரட்டைக் கோபுரம் மற்றும் பென்ரகள் மீதான செப்டெம்பர் 11 வான் தாக்குதல், ஈராக் மீதான அமெரிக்க சார்பு படைகளின் வான் தாக்குதல், லெபனான் மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல் ஆகியவற்றுக்கு அண்மித்ததான முக்கியத்துவம் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தமிழீழ வான் புலிகளின் தாக்குதலுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

பிபிசி, சிஎன்என்,அல்ஜசீரா, வசிங்டன் போஸ்ட், த ஏஜ், ரைம்ஸ் போன்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஊடகங்கள் உலக வரலாற்றில் புரட்சிப் படையொன்றினால் நடத்ப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவென்றும், தாக்குதல் முறைமையானது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டுபண்ணியுள்ளது என்ற தொனியிலேயே செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இந்த தாக்குதல் சர்வதேச ரீதியில் புலிகளுக்கு பெரும் புகழ்மிகு பிரச்சாரத்தை வழங்கியிருந்ததை சிறீலங்கா அரசாங்ம் கூட மனதளவிலாவது உணர்ந்து கொண்டிருக்கும்.

தனியரசுக்கு தேவையான அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரு விடுதலை அமைப்பு தமிழர் தேசத்திலேயே உறுதியாகக் கால் பதித்து நிமிர்ந்து நிற்கிறது. விடுதலை அமைப்பு என்னும் பொழுது தனித்து இராணுவக் கட்டமைப்போடு மட்டும் நின்று விடாமல் சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளான காவல்துறை, நிதித் துறை, நீதி நிர்வாகத் துறை போன்ற துறைகளை முதன்முதலில் நிறுவி சிறப்பாக பேணிவரும் விடுதலைப் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்றும் அத்துடன் அவர்களிடம் மட்டுமே கடற்படையும் வான்படையும் உண்டென்பதுவும் மேற்கூறிய ஊடகங்களால் கூறப்பட்டிருந்தமை நினைவுகூரத் தக்கது.

பொருளாதாரத்திற்கு வீழ்ந்த அடி

தமிழீழ வான் புலிகளின் தாக்குதலானது பொருளாதார இலக்கொன்று தாக்கப்படும் முன்னரேயே சிறீலங்காவின் பொருளாதாரத்தை பாதாளத்தை நோக்கி தட்டி விட்டிருக்கிறது. பொருளாதாரமே ஒரு நாட்டின் உயிர்நாடி என்ற வகையில் சிறீலங்கா அரசாங்கம் அதனை முன்னேற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் சிதைத்துள்ளது. இதனூடாக உல்லாசத் துறை, பங்குச் சந்தை என்பனவற்றில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நியுஸீலாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்வதை இயன்றவரை தவிர்க்கும் படி தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவறுத்தியுள்ளன.

அத்துடன், எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதோடு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதி கிடைப்பதில் தேக்க நிலை ஏற்படக் கூடிய ஆபத்துக்களும் உண்டு. இதனூடாக பொருளாதாரம் வீழ்ச்சியடைவதோடு மக்களின் வாழ்கைச் செலவு அதிகரிக்கும்.

இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலா?

அரசாங்த்தாலும் அதன் பரிவாரங்களாலும் கூறப்படுவது போல் இது பயங்கரவாத் தாக்குலில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறுமுடியும். ஐ.நா உள்ளிட்ட சர்சதேச சமூகம் தாக்குதல் இடம்பெற்று சுமார் 72 மணிநேரம் கழிந்த நிலையிலும் தாக்குதல் தொடர்பான கண்டனத்தை தெரிவிக்காமை என்பது புலிகளினுடைய தாக்கதலுக்கான நியாயத்தை புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள் என எதிர்பார்க்க முடியும். பயங்கரவாத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா கூட சுமார் 72 மணிநேரமாகியும் கருத்தெதனையும் தெரிவிக்காமை, அவர்கள் பயங்கரவாத செயற்பாட்டிற்கும் விடுதலைப் போராட்டத்திற்குமிடையிலான வேறுபாட்டை அறிந்துள்ளார்கள் என்பதை அறிகுறியாகக் கொள்ளமுடியும்.

அரசாங்கம் தனக்கு ஏற்படவுள்ள பேராபத்தை சிந்திக்காமல் ஏன் அவசரப்பட்டு தென் ஆசியாவுக்கே புலிகளின் விமானப் படையால் ஆபத்து என அலட்டிக் கொள்கிறது? இது வான் புலிகளை தம்மால் தனித்து நின்று எதிர்க்க திரணியற்றதை வெளிப்படுத்துகிறது.

அரசாங்கம் போகிற போக்கில் வான் புலிகளின் விமானம் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டு ஈராக்கில் எண்ணெயை மீள் நிரப்பிவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டு தனது பயங்கரவாத கோசத்துக்கு வலுச் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அத்துடன் முன்னாள் றோ அதிகரியும் தற்போதைய அரசியல் இராணுவ ஆய்வாளருமான பி.ராமன் குறிப்பிடுவது போல் வான்புலிகளால் தமிழ் நாட்டுக்கோ இந்தியாவுக்கோ எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. தமிழீழ வீடுதலைப் புலிகளோடு ஏனைய எந்த இயக்கங்களையும் ஒப்பிடமுடியாது. ஏனெனில் புலிகளின் கட்டமைப்பும் அவர்களுடைய பரிமாண வளர்ச்சியும் யாருடனும் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாதது. அப்படியிருக்கையில் உல்பா மற்றும் அசாம் இயக்கங்களை புலிகளின் வல்லமை, நுட்பங்களுடன் ஒப்பிட முடியாது. உல்பா மற்றும் அசாம் இயக்கங்களுக்கு ஒரு விமான தளத்தை அமைத்து பேணிப்பாதுகாக்க முடியுமா என்பது கேள்விக்குறியான விடயமே. ஏனெனில் அவர்களுடைய தளங்கள் பெரும்பாலம் நகரும் தளங்களாகவும், பெரும் நிலப்பரப்பு அவர்களின் நேரடியான கட்டுபட்பாட்டில் இல்லையென்பதுவும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியவையாகும்.

இவையல்லாவற்றுக்குமப்பால் தமது ஆளுகைக்கு உட்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய தட்டிக் கழிக்க முடியாத பொறுப்பு புலிகளுக்கு உண்டு. ஆகவே தமது மக்களை சிறீலங்காப் படையினரின் தாக்குதலிருந்து பாதுகாப்பதன் ஒரு அங்கமான முன்னேற்பாட்டு தாக்குதலை பயங்கரவாத் தாக்குதலென்று மூளை சரியாக இயங்குபவர்கள் சொல்ல மாட்டார்கள்.

தமிழர்களுக்குள்ள தார்மீக பொறுப்பு

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் அதன் அடைவிலக்கு நோக்கிய இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. இறுதி அத்தியாயம் வெற்றிகரமாகவும் விரைவானவும் நிறைவு செய்யப் பட வேண்டுமானால் அதில் ஒவ்வொரு தமிழனுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனூடாவே தமிழ் தேசியத்தை வலுப்படுத்த முடியும்.

ஆதலால் வடக்கு கிழக்கு தமிழர், மலையகத் தமிழர், இந்தியா வம்சாவளித் தமிழர், தமிழ் நாட்டு தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் எனக் கூறுபட்டுபோய் நிற்காமல் தமிழன் என்ற ஒரே அடையாளத்திற்காய் ஒன்றுபட்டு போராட்ட சக்கரம் வேகமாகச் சுழன்று இலக்கையடைவதற்கு தமது பங்களிப்பை இதயசுத்தியுடன் நல்க வேண்டும். போரட்ட பங்களிப்பென்பது தனித்து ஆயுதம் தூக்குவது மட்மல்ல. அது எங்களது தலைவிதியை நாமே அமைத்துக் கொள்வதற்கான பேனா தூக்குவதாக, பொருளாதார ரீதியானதாக (நிதியை நல்குவதாக), மனோரீதியான பலத்தை ஊட்டுவதாக, புலனாய்வு ரீதியாக, கலை இலக்கிய ரீதியாக, அரசியல் ரீதியாக என்று பல்வேறு தளங்களில் நின்று தமது பங்களிப்பை ஒவ்வொரு தமிழனும் வழங்க முன்வர வேண்டும்.

“இராணுவத்துக்கு பலத்த அடி கொடுதால் எங்கட பெடியாள் என்பதற்கும்காரணத்தோடு காத்திருந்தால் இவங்கள் என்ன செய்யிறாங்கள் என்பதற்கும்” தமிழர்களுடைய போராட்டம் ஒன்றும் கிரிக்கட் ஆட்டமல்ல என்பதை என்றும் நினைவிற் கொள்ள வேண்டும்.

எமக்கான விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும், அதற்கு மிகப் பொருத்தமான தலைமை எமக்குண்டு. அந்த தலைமையின் கீழ் ஒன்று திரண்டு எமது அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காகவும் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்காகவும் நாம் மேலே குறிப்பிட்டது போல் உடனடியாகவே களத்திலிறங்க வேண்டும்.

பாதச்சுவடுகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப எமக்கான விடுதலை விரைவு பெறும்.

சிவஒளி

0 Comments:

Post a Comment

<< Home